மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமைதி அல்லது அழிவு ஏற்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.

News image
அமெரிக்க மக்களிடையே பேசும் டிரம்ப்.
Updated On :22 ஜூன் 2025, 2:59 am

DIN

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று(ஜூன் 21) 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து, அந்நாட்டு மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது:

ஈரான் மீதான தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. அமெரிக்க ராணுவம் நடத்திய சிறப்பான தாக்குதலுக்கு வாழ்த்துகள். ஈரான் மீதான தாக்குதல் தொடரும்; அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து குழுவாக பணியாற்றியுள்ளோம். அவருக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பயங்கரவாத அச்சுறுத்தலைத் தகர்த்து எறிவதில் நீண்ட தூரம் சென்றுவிட்டோம். இஸ்ரேல் ராணுவத்துக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. வேறு எந்த நாடும் செய்யாதவொன்றை அமெரிக்கா செய்துள்ளது.

கடந்த 8 நாள்களில் நாம் பார்த்த தாக்குதலைவிட இது மிகவும் அதிகம். நினைவில் கொள்ளுங்கள். இன்னும் பல இலக்குகள் உள்ளன. பல ஆண்டுகளாக உலகம் கண்டிராத நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தை வாழ்த்துகிறேன்.

உலகிலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான். சில இலக்குகள் விட்டு வைத்துள்ளோம். ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிடில் தாக்குதல் தீவிரமாக இருக்கும். பெரும்பாலான இலக்குகளை சில நிமிடங்களிலேயே அழித்துவிடுவோம் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.