சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

அமைதி அல்லது அழிவு ஏற்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.

News image

அமெரிக்க மக்களிடையே பேசும் டிரம்ப்.

Updated On :22 ஜூன் 2025, 8:33 am IST

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று(ஜூன் 21) 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து, அந்நாட்டு மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது:

ஈரான் மீதான தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. அமெரிக்க ராணுவம் நடத்திய சிறப்பான தாக்குதலுக்கு வாழ்த்துகள். ஈரான் மீதான தாக்குதல் தொடரும்; அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து குழுவாக பணியாற்றியுள்ளோம். அவருக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பயங்கரவாத அச்சுறுத்தலைத் தகர்த்து எறிவதில் நீண்ட தூரம் சென்றுவிட்டோம். இஸ்ரேல் ராணுவத்துக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. வேறு எந்த நாடும் செய்யாதவொன்றை அமெரிக்கா செய்துள்ளது.

கடந்த 8 நாள்களில் நாம் பார்த்த தாக்குதலைவிட இது மிகவும் அதிகம். நினைவில் கொள்ளுங்கள். இன்னும் பல இலக்குகள் உள்ளன. பல ஆண்டுகளாக உலகம் கண்டிராத நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தை வாழ்த்துகிறேன்.

உலகிலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான். சில இலக்குகள் விட்டு வைத்துள்ளோம். ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிடில் தாக்குதல் தீவிரமாக இருக்கும். பெரும்பாலான இலக்குகளை சில நிமிடங்களிலேயே அழித்துவிடுவோம் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.