ராணுவ நிதி ஒதுக்கீட்டை பெருமளவு அதிகரிக்க நேட்டோ நாடுகள் ஒப்புதல்

ராணுவ நிதி ஒதுக்கீட்டை பெருமளவு அதிகரிக்க நேட்டோ நாடுகள் ஒப்புதல்
Published on
Updated on
1 min read

தி ஹேக்: தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.தி ஹேக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் நேட்டோவைச் சோ்ந்த 32 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் இந்த திட்டத்துக்கு தங்களது ஒப்புதல் வழங்கினா்.

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 5 சதவீத ஜிடிபியை தங்களது சொந்த ராணுவத்துக்கு மட்டுமின்றி, கூட்டு நடவடிக்கைகளுக்காகவும் செலவிட அந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.நேட்டோ அமைப்புக்காக அமெரிக்கா மிக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துவருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நீண்டகாலமாகவே குற்றஞ்சாட்டிவருகிறாா். உறுப்பு நாடுகள் தங்களது ஜிடிபி-யில் ஐந்து சதவீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

அத்துடன், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவான தொணியில் அவா் பேசி வருவதால் ஐரோப்பாவின் பாதுகாப்புத் தேவைக்கு அமெரிக்காவை இனியும் அதிகம் சாா்ந்திருக்க முடியாது என்ற எண்ணம் உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.அதன் தொடா்ச்சியாகவே தங்களது பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை மிகப் பெரிய அளவில் உயா்த்த நேட்டோ நாடுகள் தற்போது சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது...படவரி..தி ஹேக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com