தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அமெரிக்க உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர பிரிட்டனுக்கு தடை!

அமெரிக்க உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் உக்ரைன் அதிபா் வெலோதிமீா் ஸெலென்ஸ்கி. (கோப்புப்படம்)

AP

Updated On :5 மார்ச் 2025, 8:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.

உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு கைமாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வெலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்தவாரம் வெள்ளை மாளிகை சென்றிருந்தார்.

அப்போது அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெற்ற விவாதம் வாக்குவாதமாக மாறிய நிலையில், ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் அங்கிருந்து ஸெலென்ஸ்கி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான ராணுவ உதவிகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக திங்கள்கிழமை அறிவித்தார்.

ஆயுதங்கள் மட்டுமின்றி வான்வழித் தாக்குதல்களைக் கண்காணித்து எச்சரிப்பது, உளவுத் தகவல் தருவது ஆகியவற்றையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனின் உளவுத்துறையுடன் அமெரிக்க உளவுத்துறை பகிரும் தகவல்களை உக்ரைனுடன் பகிரவும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகளாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பெறும் ரஷியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவும் ‘உக்ரைனுக்கு வெளியிடக்கூடியவை’ என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில தகவல்களை பிரிட்டனுடன் பகிர்ந்து வந்தது. தற்போது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உளவுச் செய்திகளை உக்ரைனுக்கு பகிர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கை போரில் அந்நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.