பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு தயாராகும் சீனா?

வர்த்தகப் போர் அபாயத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச வர்த்தக மையத்தில் சீனா வழக்கு

News image

சீன அதிபர் ஜின்பிங் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Updated On :5 மார்ச் 2025, 3:59 pm IST

வர்த்தகப் போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியிலான `சண்டை செய்ய’ தயார் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா, தங்கள் மீதான வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கும் வரி விதிப்பு அறிவித்துள்ளது. அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் சோயாபீன்ஸ், சோளம், பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், கடல்வாழ் பொருள்கள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி முதலான பொருள்களுக்கு 10 சதவிகித கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம், பருத்தி, கோழி, கோதுமைக்கு 15 சதவிகித வரி விதிக்கப்படுவதாக சீன நிதியமைச்கம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு மார்ச் 10 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக சீனா அறிவித்துள்ளது. இதனோடு சேர்த்து, கூடுதல் இணைப்பாக அமெரிக்காவின் 25 ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களுக்கு சீனா கட்டுப்பாடு விதித்ததுடன், பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் ஈடுபட்டுள்ள 10 அமெரிக்க நிறுவனங்களை நம்பிக்கையற்ற நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கவும் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமைமுதல் (மார்ச் 4) அமலுக்கு வந்தது.

குறிப்பாக, சீன பொருள்களுக்கு அறிவித்திருந்த 10 சதவிகித வரியுடன், கூடுதலாக 10 சதவிகித வரியையும் டிரம்ப் அறிவித்தது, சீனாவிடம் எதிர்ப்பைக் கிளப்பியது. சீனாவில் தயாரிக்கப்படும் போதை மருந்துகள் கனடா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதால் சீனாவுக்கு கூடுதல் வரி என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கு சீனா வரி விதிக்கும் பட்சத்தில், சீனாவுக்கு செல்லும் அமெரிக்காவின் பொருள்களின் அளவு சரிவைச் சந்திப்பது மட்டுமின்றி, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பெரும் இழப்பும் நேரிடலாம்.

கூடுதலாக, உலக வர்த்தகப் போர் அபாயத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச வர்த்தக மையத்தில் சீனா வழக்கு தொடுத்துள்ளது. அமெரிக்கா வர்த்தகப் போர் செய்யுமானால், கடைசிவரையில் சீனா சண்டை செய்யும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.