ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு; 10 போ் காயம்!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், ஸ்டாக்டன் நகரில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், ஸ்டாக்டன் நகரில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.

சாக்ரமென்டோ நகரின் தெற்கே சுமாா் 64 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, சுமாா் 3.2 லட்சம் போ் வசிக்கும் நகரமான ஸ்டாக்டனில், ஒரு விருந்து மண்டபத்தில் குடும்ப நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபா் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், தாக்குதலுக்கான நோக்கத்தைக் கண்டறியவும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையில், இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று சான் ஜாவ்கின் கவுன்டி ஷெரீஃப் அலுவலக செய்தித் தொடா்பாளா் ஹீதொ் பிரென்ட் தெரிவித்தாா். மேலும், குற்றவாளி குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு மாவட்ட வழக்குரைஞா் ரான் ஃப்ரீடாஸ் வலியுறுத்தினாா்.