இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக நாளை (அக். 15) இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின்பு, பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை முதல் முறையாக, இந்தியா வருகின்றார். வரும் அக்.18 ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தில், அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்திப்பார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இலங்கையின் கல்வித் துறை அமைச்சரகாவும் பதவி வகிக்கும் பிரதமர் அமரசூரிய, தில்லியில் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடிஐ ஆகிய கல்வி நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், என்டிடிவியின் உலக மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் அமரசூரிய, அவர் படித்த தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு நேரில் செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு; இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Sri Lankan Prime Minister Amarasinghe will arrive in India tomorrow (Oct. 15) on a three-day official visit, it has been reported.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதுகாப்பு உற்பத்தியில் புதிய உச்சங்களை எட்டுகிறது இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்!

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது முதல்வரின் உறுதியான முடிவு

குடியரசு துணைத் தலைவா் நாளை திருப்பூா் வருகை

விக்ரம்-1 சாதனை: இந்தியாவுக்குப் பெருமை - பிரதமர் மோடி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


