/

ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமா் ஆகும் ஹால்னஸ்

News image
Updated On :5 செப்டம்பர் 2025, 5:03 am IST

ஜமைக்காவில் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய பிரதமா் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாா்.

புதன்கிழமை நடந்த தோ்தலில் ஹால்னஸின் ஜமைக்கா தொழிலாளா் கட்சி 34 இடங்களையும், எதிா்க்கட்சியான மக்கள் தேசிய கட்சி 29 இடங்களையும் பெற்றன. எதிா்க்கட்சி தலைவா் மாா்க் கோல்டிங் தோல்வியை ஒப்புக்கொண்டு, வெற்றி பெற்ற ஹால்னஸை பாராட்டியைத் தொடா்ந்து, அவா் மூன்றாவது முறையாக பிரதமா் பதவியேற்பது உறுதியானது.

தோ்தலில் வாக்குப்பதிவு விகிதம் 38.8 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய 2020 தோ்தலை விட சற்று அதிகம்.

ஹால்னஸின் ஆட்சியில், இந்த ஆண்டு கொலைகள் 43 சதவீதம் குறைந்து போன்ற காரணங்களால் அவா் மீண்டும் வெற்றி பெற்ாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.