/

ஈரான் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரான் உளவுத்துறை தலைவர் மஜீத் கதேமி கொல்லப்படதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

News image

ஈரான் உளவுத்துறை தலைவர் மஜீத் கதேமி - X

Updated On :6 ஏப்ரல் 2026, 10:03 am

ஈரான் உளவுத்துறை தலைவர் மஜீத் கதேமி கொல்லப்படதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மஜீத் கதேமியைக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய கட்ஸ், ”ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் பொதுமக்களைக் கொன்று வருகின்றனர். நாங்கள் அந்த பயங்கரவாதிகளின் தலைவர்களை ஒழித்து வருகிறோம்.

ஈரான் தலைவர்கள் தாங்கள் குறிவைக்கப்படுவோம் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ஒவ்வொருவராக வேட்டையாடுவோம்.

ஈரானின் பெட்ரோகெமிக்கல் நிலையங்கள் மற்றும் இரும்பு தொழிற்சாலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளோம்.

ஈரானின் தேசிய உள்கட்டமைப்பை தொடர்ந்து சிதைப்போம். இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி பயங்கரவாதத்தை வளர்க்கும் அரசை ஒழித்துக்கட்டுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் காலக்கெடு விதித்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர் தாக்குதல்களை நடத்தி பொதுமக்களைக் கொல்வதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டது ஈரானுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Summary

Israel says it killed Revolutionary Guard intel chief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.