தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?

ஹோர்முஸ் நீரிணையில் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய முடியாமல் ஈரான் படைகள் தவிப்பு...

News image

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்... - AP

Updated On :11 ஏப்ரல் 2026, 8:48 am

ஹோர்முஸ் நீரிணையின் பாதையில் ஈரான் படைகள் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்தப் பாதையை முழுவதுமாகத் திறக்க முடியாத சூழல் உருவாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் படைகள் முடக்கின. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது.

இந்தப் போரின்போது அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சில வெளிநாடுகளின் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின. மேலும், அவ்வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுக்க சிறிய படகுகள் மூலம் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கண்ணிவெடிகள் பொருத்தின.

இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப். 7 அன்று 2 வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதையின் வழியாக சர்வதேச நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், எரிபொருள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் விநியோகம் சற்று இயல்புநிலைக்குத் திரும்புகிறது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய அந்நாட்டு படைகளால் முடியவில்லை எனவும், அவை கடலின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறக்க முடியாத சூழல் உருவாகி, சர்வதேச எரிபொருள் விநியோகம் பாதிப்படையும் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுபற்றி ஈரான் அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports have emerged stating that mines planted by Iranian forces along the route of the Strait of Hormuz could not be detected.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.