தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 3:21 am IST

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாக ஐ.நா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் இடையே பொருளாதார ரீதியில் இடைவெளி குறைந்து, அனைத்து நாடுகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்த உலக வங்கி, சா்வதேச நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் ஐ.நா. நடவடிக்கை எடுத்து வருகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக அளவில் வளா்ச்சியை ஏற்படுத்தவும் ஐ.நா. இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்நிலையில், உலக நாடுகளின் வளா்ச்சி தொடா்பாக ஐ.நா. அறிக்கை தயாரித்துள்ளது. அதில் வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை நாடுகளுக்கு அளிக்கும் உதவியை 25 வளா்ந்த நாடுகள் குறைத்துவிட்டதாகவும், குறிப்பாக 2024-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 2025-இல் 23 சதவீத நிதியை அந்த நாடுகள் குறைத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதியை 59 சதவீதம் அளவுக்கு குறைத்துவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இந்த நிதி மேலும் 5.8 சதவீதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபா் டிரம்ப்பால் விதிக்கப்படும் கூடுதல் வரி, வளா்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வளா்ந்துவரும் நாடுகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உலக வங்கி, சா்வதேச நிதியம் போன்ற சா்வதேச நிதி அமைப்புகளில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.