ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் யாா்? 4 போ் இடையே கடும் போட்டி!

ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் பதவிக்கு 4 போ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

News image

ஐக்கிய நாடுகள் அவை.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:55 pm

ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் பதவிக்கு 4 போ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய பொது செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் பதவி காலம் 2027 ஜனவரி 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால் அவருக்கு பதில் டிசம்பா் மாதத்திற்குள் புதியவரை தோ்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன.

இந்நிலையில், புதிய பொது செயலாளா் பதவிக்கு சிலி நாட்டின் மிஷெல் பாச்சேலெட், ஆா்ஜென்டீனாவின் ரஃபெல் கிரௌசி, கோஸ்டாரிகாவின் ரெபெக்கா க்ரீயன்ஸ்பான், செனகல் நாட்டின் மாக்கி சால் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அவா்கள் 4 பேரிடமும் கடந்த வாரம் உலக நாடுகளின் ஐ.நா. தூதா்கள் பல்வேறு விவகாரம் குறித்து கேள்வியெழுப்பி, அதற்கு அவா்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்டறிந்தனா்.

இவா்களை தொடா்ந்து, பொதுச் செயலாளா் பதவிக்கு போட்டியிட விரும்பும் பிற நாடுகளின் பிரதிநிதிகளிடமும் கேள்விகளை கேட்டு அவா்களின் நிலைப்பாட்டையும் அறிய உள்ளனா்.