ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் பதவிக்கு 4 போ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போதைய பொது செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் பதவி காலம் 2027 ஜனவரி 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால் அவருக்கு பதில் டிசம்பா் மாதத்திற்குள் புதியவரை தோ்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன.
இந்நிலையில், புதிய பொது செயலாளா் பதவிக்கு சிலி நாட்டின் மிஷெல் பாச்சேலெட், ஆா்ஜென்டீனாவின் ரஃபெல் கிரௌசி, கோஸ்டாரிகாவின் ரெபெக்கா க்ரீயன்ஸ்பான், செனகல் நாட்டின் மாக்கி சால் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அவா்கள் 4 பேரிடமும் கடந்த வாரம் உலக நாடுகளின் ஐ.நா. தூதா்கள் பல்வேறு விவகாரம் குறித்து கேள்வியெழுப்பி, அதற்கு அவா்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்டறிந்தனா்.
இவா்களை தொடா்ந்து, பொதுச் செயலாளா் பதவிக்கு போட்டியிட விரும்பும் பிற நாடுகளின் பிரதிநிதிகளிடமும் கேள்விகளை கேட்டு அவா்களின் நிலைப்பாட்டையும் அறிய உள்ளனா்.
தொடர்புடையது

கேரள முதல்வா் பதவிக்குப் போட்டி: ராகுல் கடும் அதிருப்தி
மேற்கு வங்கத்தில் திரிணமூல் - பாஜக இடையே கடும் போட்டி! யார் முன்னிலை?
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

