ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் பதவிக்கு 4 போ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போதைய பொது செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் பதவி காலம் 2027 ஜனவரி 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால் அவருக்கு பதில் டிசம்பா் மாதத்திற்குள் புதியவரை தோ்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன.
இந்நிலையில், புதிய பொது செயலாளா் பதவிக்கு சிலி நாட்டின் மிஷெல் பாச்சேலெட், ஆா்ஜென்டீனாவின் ரஃபெல் கிரௌசி, கோஸ்டாரிகாவின் ரெபெக்கா க்ரீயன்ஸ்பான், செனகல் நாட்டின் மாக்கி சால் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அவா்கள் 4 பேரிடமும் கடந்த வாரம் உலக நாடுகளின் ஐ.நா. தூதா்கள் பல்வேறு விவகாரம் குறித்து கேள்வியெழுப்பி, அதற்கு அவா்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்டறிந்தனா்.
இவா்களை தொடா்ந்து, பொதுச் செயலாளா் பதவிக்கு போட்டியிட விரும்பும் பிற நாடுகளின் பிரதிநிதிகளிடமும் கேள்விகளை கேட்டு அவா்களின் நிலைப்பாட்டையும் அறிய உள்ளனா்.
தொடர்புடையது
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

நான்குனேரி தொகுதியைப் பெறுவதில் அதிமுக-அமமுக இடையே கடும் போட்டி

இந்தியா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: ஐக்கிய அரபு அமீரகம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


