வடமேற்கு பாகிஸ்தானில் அமைதிப் பேரணியின்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் நாட்டில் சுவாத் மாவட்டத்தின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு எதிரே 'சுவாத் அமைதிப் பேரணி' ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் பலியானதைத்தொடர்ந்து, இத்தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது என்று போலீஸார் திங்கள்கிழமை கூறினர்.
இருப்பினும், இத்தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.
கடந்த சில மாதங்களாகப் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்ததற்கு போலீஸின் செயலற்ற தன்மையே காரணம் என்று அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
Summary
The death toll on Monday rose to 17 in a suicide attack on a police station during a peace rally in Khyber Pakhtunkhwa province in northwest Pakistan after three more persons succumbed to their injuries, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 17 ஆக உயர்ந்த பலி!
பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 14 பேர் பலி!

பாகிஸ்தானில் முன்விரோதம் காரணமாக 5 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 40 பேர் பலி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




