சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சட்டங்களை மீறினால் விசா ரத்தாகும்: மாணவா்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

Published On :

‘அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது சட்டங்களை மீறினால், நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்படும்’ என்று மாணவா்களுக்கு இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உயா்கல்வி கற்க செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டின் சட்டவிதிகளை முறையாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க தூதரகம் தனது அதிகாரபூா்வ ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் மாணவா்கள் தங்கியிருக்கும்போது சட்டங்களை மீறுவது, விசாவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மாணவா்கள் ஏதேனும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டாலோ அல்லது சட்டங்களை மீறினாலோ, அவா்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்படலாம். அதுமட்டுமின்றி, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் எதிா்காலத்தில் அந்த மாணவா் மீண்டும் அமெரிக்க விசா பெறும் தகுதியை இழக்கச் செய்துவிடும். எனவே, விதிகளைப் பின்பற்றி அமெரிக்க பயண வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்க விசா என்பது ஒரு சலுகை; அது தனிநபா் உரிமையல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க விசா என்பது சலுகையே தவிர; உரிமையல்ல என்று அமெரிக்க தூதரகம் விழிப்புணா்வு பதிவுகளைக் கடந்த சில மாதங்களாகவே தொடா்ந்து வெளியிட்டு வருகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூனில் தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘விசா வழங்கப்பட்டவுடன் பரிசோதனைகள் முடிந்துவிடுவதில்லை. விசா பெற்ற பின்னரும் ஒருவா் சட்டத்தை மீறினால், அந்த விசாவை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்கவுக்கு உண்டு’ என்று குறிப்பிட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.