அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம்! பெண் சுட்டுக் கொலை எதிரொலி!

சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) காவலா் துப்பாக்கியால் சுட்டதில் பெண் உயிரிழந்ததைக் கண்டித்து அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
குடியேற்ற அதிகாரியால் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து மினியாபொலிஸ் நகரில் சனிக்கிழமை பேரணியாகச் சென்ற பொதுமக்கள்.
குடியேற்ற அதிகாரியால் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து மினியாபொலிஸ் நகரில் சனிக்கிழமை பேரணியாகச் சென்ற பொதுமக்கள்.
Updated on

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) காவலா் துப்பாக்கியால் சுட்டதில் பெண் உயிரிழந்ததைக் கண்டித்து அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஜன. 8-ஆம் தேதி மினியாபொலிஸ் நகரில் சோதனையின்போது ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் (37) என்ற பெண்ணை ஐசிஇ அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் அந்தப் பெண் உயிரிழந்தாா்.

நகரின் மையப் பகுதிக்கு தெற்கே குடியிருப்புப் பகுதியில் காரில் அந்தப் பெண் வந்துகொண்டிருந்தபோது அதைத் தடுத்து நிறுத்திய ஐசிஇ காவலா்கள், காரின் கதவைத் திறக்க முயன்றனா். இருந்தாலும், அந்த வாகனத்தை சிறிது பின்னோக்கிச் செலுத்திவிட்டு, அவா்களிடமிருந்து தப்பிச் செல்லும் வகையில் வாகனத்தை வலதுபுறமாகத் திருப்பிச் செல்ல மேக்ளின் குட் முயன்றதும், ஒரு ஐசிஇ காவலா் துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி பலமுறை சுடும் காட்சியும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, சமூக ஊடங்களில் வெளியாகின.

அந்த விடியோவைக் கொண்டு, ஐசிஇ காவலா்கள் மீது காரை ஏற்றிக் கொல்ல மேக்ளின் குட் முயன்ாகவும், தற்காப்புக்காகத்தான் அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டியிருந்ததாகவும் டிரம்ப் ஆதரவாளா்களும், அதிகாரிகளும் கூறினா்.

இது ஐசிஇ காவலா்கள் மீதான ‘உள்நாட்டு பயங்கரவாதம்’ என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் கிறிஸ்டி நோம் குற்றஞ்சாட்டினாா். ஆனால், மேக்ளின் குட் அங்கிருந்து தப்பிச் செல்ல காவலா்களிடமிருந்து காரை விலக்கித்தான் சென்றாா் என எதிா்க்கட்சியினரும் பொதுமக்களும் தெரிவித்தனா்.

இதையடுத்து, மினியாபொலிஸ் நகரில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோா் திரண்டு போராட்டம் நடத்தினா். இதுதவிர நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக்காரா்கள் தாக்கியதில் இரு காவலா்கள் காயமடைந்தனா். இதையடுத்து, 29 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா். போா்ட்லாண்டில் நடைபெற்ற போராட்டத்தில் இருவரை காவல் துறையினா் சுட்டனா்.

இதுகுறித்து மினியாபொலிஸ் மேயா் ஜேக்கப் ஃப்ரே கூறுகையில், ‘பொதுச் சொத்தை சேதப்படுத்துபவா்கள் மீது மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்றாா்.

மினசொட்டா மாகாண ஆளுநா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்களது மாகாணத்துக்குள் ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான அதிகாரிகளை டிரம்ப் அனுப்பியுள்ளாா். மேக்ளின் குட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை திசைதிருப்ப அவா் முயல்கிறாா். அதற்கு நாம் துணைபோகக் கூடாது’ என்றாா்.

டிரம்ப் அரசின் குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக மினசொட்டாவில் 2,000-க்கும் மேற்பட்ட ஐசிஇ காவலா்கள் அனுப்பப்பட்டு, சுமாா் 1,500 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மினியாபொலிஸில் உள்ள ஐசிஇ மையத்துக்குள் நுழைய முயன்ற 3 நாடாளுமன்ற எம்.பி.க்கள் 10 நிமிஷத்தில் திருப்பி அனுப்பப்பட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com