
11 பயணிகளுடன் இந்தோனேசியா விமானம் மாயம்! தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
இந்தோனேசியாவின் சுலவேசி அருகே சென்ற 11 பயணிகளுடன் சென்ற விமானம், தொடர்பை இழந்ததால், தேடும் பணி தீவிரம்

விமானம் - பிரதிப் படம்
இந்தோனேசியாவில் 11 பயணிகளுடன் சென்ற விமானம், தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்ததால், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுலவேசி ஆகிய இரு தீவுகளுக்கு இடையில் மலைப்பாங்கான பகுதியை ஏடிஆர் 42-500 விமானம் நெருங்கும்போது, இன்று (ஜன. 17) மதியம் 1.17 மணியளவில் தரைக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 11 பேர் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், விமானம் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் கடல்சார் விவகாரம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் தரைப் பிரிவுகளின் ஆதரவுடன் பல தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, புலுசரௌங் மலை அருகே விமானப் பாகங்கள் சிதறிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
Summary
Indonesian plane with 11 people on board goes missing
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






