ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹெச்-1 பி விசாவை நிறுத்தியது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் : இந்தியா்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஹெச்-1 பி விசாவுக்கு புதிதாக விண்ணப்பிப்பதை நிறுத்தும்படி, அரசு பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உத்தரவிட்டிருப்பதால், இந்தியா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
விசா- பிரதிப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

ஹெச்-1 பி விசாவுக்கு புதிதாக விண்ணப்பிப்பதை நிறுத்தும்படி, அரசு பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உத்தரவிட்டிருப்பதால், இந்தியா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக டெக்சாஸ் மாகாண ஆளுநா் கிரேக் அபோட் வெளியிட்ட உத்தரவில், ‘ஹெச்-1 பி விசா தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அண்மையில் வெளியான தகவல்களாலும், அமெரிக்க வேலைவாய்ப்புகள் அமெரிக்கா்களுக்கு செல்வதை உறுதி செய்யும் வகையிலான அமெரிக்க மைய அரசின் திட்டத்தாலும், அனைத்து அரசு நிறுவனங்களும் புதிதாக ஹெச்-1 பி விசாக்களுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், ஹெச்-1பி விசா பயன்பாடு, அதை எத்தனை போ் வைத்துள்ளனா், விசா வைத்திருப்போா் செய்யும் வேலைகள், அவா்களின் பூா்விக நாடுகளின் பெயா், விசா முடிவடையும் தேதிகள் ஆகியவற்றை அரசு நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாகச் செல்லும் வெளிநாட்டினா் ஹெச்-1பி விசா வைத்திருப்பது அவசியமாகும். கடந்த சில ஆண்டுகளில் அந்த விசா மூலம் அமெரிக்கா சென்ற மொத்த வெளிநாட்டினரில் 70 சதவீதம் போ் இந்தியா்களே என அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா்களுக்கு அடுத்து, அமெரிக்காவுக்கு அதிகம் சென்ற வெளிநாட்டினரில் சீனா்கள் 2-ஆவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினா் பணிபுரிகின்றனா். அவா்களில் இந்தியா்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அங்கு அவா்கள் கட்டுமானம், சுகாதாரம், தொழில்நுட்பம் சாா்ந்த துறைகளில் பணியாற்றுகின்றனா்.

டெக்சாஸ் மாகாண ஆளுநரின் இந்த உத்தரவால், அங்கு செல்ல விரும்பும் இந்தியா்களுக்கு இனி எளிதில் ஹெச்-1பி விசா கிடைக்காது எனக் கூறப்படுகிறது. அதேபோல், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் திறமையானோரை பணியில் அமா்த்துவது பாதிக்கப்படக்கூடும்; குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் புதியன கண்டுபிடித்தலில் திறமையானோரை பணியில் அமா்த்துவது தாமதமடையும் எனச் சொல்லப்படுகிறது.