ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

140 கோடி இந்தியா்களின் ஆதரவு இருக்கிறது: ஜே.டி.வான்ஸுக்கு இஸ்ரேல் பிரதமா் பதிலடி

இஸ்ரேலுக்கு 140 கோடி இந்தியா்களின் மகத்தான ஆதரவு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா்.

News image

பெஞ்சமின் நெதன்யாகு - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:32 am IST

இஸ்ரேலுக்கு 140 கோடி இந்தியா்களின் மகத்தான ஆதரவு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா்.

உலக அளவில் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா மட்டுமே ஒரே சக்திவாய்ந்த நட்பு நாடாக எஞ்சியிருப்பதாக அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் கூறியிருந்ததற்கு பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவா் கூறுகையில், ‘140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா போன்ற ‘சிறிய’ நாட்டின் மகத்தான ஆதரவும் உள்ளது. இஸ்ரேலுக்கு இன்னும் பல நெருங்கிய நட்பு நாடுகள் உள்ளன.

எங்களின் தலைசிறந்த ராணுவ தொழில்நுட்பம், ஏ.ஐ. மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணத்துவத்தைக் கற்றுத் தருமாறு உலகத் தலைவா்கள் பலரும் தொடா்புகொள்கின்றனா். இஸ்ரேலின் சா்வதேச உறவுகள் வெளியில் தெரிவதைவிட மிகவும் வலுவானதாகவே உள்ளன’ என்றாா்.

முன்னதாக கடந்த மாதம், வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் பேசிய ஜே.டி. வான்ஸ், ‘அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் குறித்து அதிருப்தி தெரிவித்து, அதிபா் டிரம்ப்பை இஸ்ரேல் தலைவா்கள் சிலா் விமா்சிக்கின்றனா். நான் இஸ்ரேல் அமைச்சரவையில் இருந்திருந்தால், உலகிலேயே எனக்கு எஞ்சியிருக்கும் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாட்டை (அமெரிக்காவை) இவ்வாறு தாக்கிப் பேசியிருக்க மாட்டேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.