ஈரான் நடத்திய வான்வெளித் தாக்குதாலில் குவைத் சர்சதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவை அமெரிக்க படைகள் செவ்வாய்க்கிழமை தாக்கினர்.
அண்டை நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ஈரான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. தற்காப்புக்காக அமெரிக்க படைகள் ஈரானின் கெஷ்ம் தீவை தாக்கியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், குவைத் சர்வதேச விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பலியானதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விமான நிலையத்தில் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்த வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சேதங்கள் குறித்து தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்த பிறகு, குவைத் விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் இருந்து மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
குவைத் விமான நிலையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் மீண்டும் போர்ப் பதற்றம் நிலவுகிறது.
Summary
Kuwait Airport Devastated in Iranian Attack - One Dead
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








