/
இலங்கையில் கடந்த 2019-இல் நடந்த ஈஸ்டா் குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடா்பான வழக்கில், அந்நாட்டின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபக்ச (படம்) மற்றும் 2 முன்னாள் ராணுவ, உளவு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குப் பயணிக்க கொழும்பு நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.
இலங்கை அரசுக்கு இந்திய உளவுத் துறை முன்கூட்டியே எச்சரித்தும், 11 இந்தியா்கள் உள்பட 270 போ் உயிரிழந்த இத்தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக முந்தைய அரசு மீது கடும் விமா்சனங்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2024-இல் ஆட்சிக்கு வந்த அதிபா் அநுர குமார திசாநாயக தலைமையிலான அரசு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், ராஜபக்ச மற்றும் பிற அதிகாரிகள் நாட்டைவிட்டுத் தப்பினால், புலனாய்வு பாதிக்கப்படலாம் எனக் காவல்துறை நீதிமன்றத்தில் வாதிட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.








