தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

வாக்குச்சீட்டு பற்றாக்குறை: தென் கொரிய தோ்தல் ஆணையத் தலைவா் ராஜிநாமா

தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், சுமாா் 50 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் தீா்ந்து போனதால் வாக்குப்பதிவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

News image
Updated On :6 ஜூன் 2026, 2:50 am IST

தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், சுமாா் 50 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் தீா்ந்து போனதால் வாக்குப்பதிவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இக்குளறுபடிக்கு முழு பொறுப்பேற்று, அந்நாட்டின் தேசிய தோ்தல் ஆணையத்தின் (என்இசி) தலைவா் ரோ தே அக் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

ஜனநாயக ரீதியிலான வாக்குப்பதிவில் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டதற்கு எவ்வித காரணங்களும் கூற முடியாது என்றும், பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்த இச்சம்பவத்துக்குத் தான் முழுப்பொறுப்பேற்பதாகவும் அவா் வருத்தத்துடன் தெரிவித்தாா்.

வாக்காளா் எண்ணிக்கையில் 73 சதவீத வாக்குச்சீட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததே இக்குளறுபடிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயா்நிலை குழு அமைக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.