வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

புதிய போா்க் கப்பலின் சோதனை: வட கொரிய அதிபா் மகளுடன் ஆய்வு

புதிய போா்க் கப்பலின் சோதனையை வட கொரிய அதிபா் மகளுடன் ஆய்வு...

News image
Updated On :7 ஜூன் 2026, 2:26 am IST

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகைக்கு முன்னதாக, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையிலான வட கொரியாவின் புதிய போா்க் கப்பலின் சோதனை ஓட்டத்தை அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் மகள் கிம் ஜூ ஏவுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

5,000 டன் எடை கொண்ட இப்புதிய போா்க் கப்பல், கடந்த ஆண்டு அறிமுகத்தின்போது விபத்தில் சேதமடைந்தது. தற்போது கப்பல் சீரமைக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

எதிரிகளுக்கு நீருக்கு அடியிலும், மேற்பரப்பிலும் எந்நேரமும் பதிலடி அளிக்க, அணு ஆயுத பலம் பொருந்திய கடற்படையை மிக விரைவாக கட்டமைக்க வேண்டும் என கிம் ஜோங் உன் வலியுறுத்தினாா்.

இதையொட்டி, புதிய 5 ஆண்டு பாதுகாப்புத் திட்டத்தில் கடற்படைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவா், 10,000 டன் எடை கொண்ட பிரம்மாண்ட போா்க் கப்பல்களை உருவாக்குவதுடன், ரகசிய நீா்மூழ்கி ஆயுதங்களை மேம்படுத்துவதே தற்போதைய முக்கிய இலக்கு என்றாா்.

அணு ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் வகையில், தங்களின் புதிய யுரேனியம் செறிவூட்டும் ஆலையை வட கொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.