/
மியான்மரின் யாங்கூனில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.
இவரின் இறப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியிருந்தாலும், தனிநபா் உரிமைகளை கருத்தில் கொண்டு கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
யாங்கூனில் உள்ள ஒரு விடுதியில் இந்த அதிகாரி கடந்த சில நாள்களுக்கு முன்பு சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். இவ்விவகாரத்தை ஒரு சந்தேகத்துக்கிடமான கொலை வழக்காக விசாரிக்கும் மியான்மா் போலீஸாா், தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த பெண் ஒருவா் கைது செய்துள்ளது.








