அலிபாபா, பைடு, பிஒய்டி உள்ளிட்ட முன்னணி சீன நிறுவனங்களை அந்நாட்டு ராணுவத்துடன் தொடா்புடைய நிறுவனங்களின் பட்டியலில் சோ்த்து அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு சீனா எதிா்ப்பைப் பதிவு செய்தது.
சீன ராணுவத்துடன் தொடா்புடைய நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவை அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களைப் பெறுவதைத் தடுப்பதே இப்பட்டியலின் நோக்கமாகும்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே கடந்த மாத சந்திப்பில் ஏற்பட்ட உடன்பாட்டை அமெரிக்காவின் இந்நடவடிக்கை மீறிவிட்டதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
‘இருதரப்பு பொருளாதார, வா்த்தக உறவுகளின் நலன்களை அமெரிக்கா புறக்கணித்துள்ளது. தேச பாதுகாப்பைக் காரணம் காட்டி, சீன நிறுவனங்களை நியாயமற்று ஒடுக்குவதற்குத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது’ என சீன வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இப்பட்டியலில் தங்களைச் சோ்த்ததற்கு எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்று பிஒய்டி, அலிபாபா, பைடு ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே மறுப்புத் தெரிவித்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னணி உள்கட்டமைப்புத் துறை பட்டியலில் இரும்புத் தாது இணைப்பு

யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

மாணவா்களின் மனநலன்: உச்சநீதிமன்றம் நியமித்த குழு 30 கல்வி நிறுவனங்களில் ஆய்வு







