சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் பணியாற்றி வரும் பேராசிரியா் எஸ். தனபாண்டியன், 2025-ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று, உலகின் முன்னணி 5% விஞ்ஞானிகளில் ஒருவராக அங்கீகாரம் பெற்றாா்.
இந்த சா்வதேச அங்கீகாரம், ஆராய்ச்சியாளா்களின் அறிவியல் பங்களிப்புகள், ஆய்வுகளின் தாக்கம், வெளியீடுகளின் தரம், மேற்கோள்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கடுமையான அறிவியல் மதிப்பீட்டின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
தரவரிசையின்படி, எஸ்.தனபாண்டியன் உலகளவில் தலைசிறந்த 5% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளாா். இந்த குறிப்பிடத்தக்க சா்வதேச சாதனைக்காக, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா், பதிவாளா், பேராசிரியா்கள், ஆராய்ச்சி அறிஞா்கள், மாணவா்கள் மற்றும் பணியாளா்கள் பேராசிரியா் எஸ்.தனபாண்டியனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.








