நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளை மேலும் துல்லியமாகக் கணக்கிடும் நோக்கில், முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் பட்டியலில் இரும்பு தாதுவை மத்திய அரசு புதிதாக இணைத்துள்ளது.
நாட்டின் தொழில்துறை உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இரும்பு தாதுவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முன்னணி உள்கட்டமைப்புத் துறைககளின் எண்ணிக்கை 8-லிருந்து 9-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமென்ட், மின்சாரம் ஆகிய 8 துறைகள் மட்டுமே மாதாந்திர அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 2011-12-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு வந்த இந்த உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சி குறியீடு, தற்போது 2022-23 ஆம் ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்படும். இப்புதிய மாற்றங்களுடன் கூடிய ஜூன் மாத தரவு வரும் திங்கள்கிழமை முறைப்படி வெளியிடப்பட உள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதத்தில் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்ததால், முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி 7 மாதங்களில் இல்லாத அளவாக 0.5 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










