புது தில்லியில் ஜூன் 22 , 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்தியா சீனா, ரஷியா உள்ளிட்ட 11 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நிகழாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.
இதன் ஒரு பகுதியாக தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் என்எஸ்ஏ மாநாட்டில் பங்கேற்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது: இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் என்எஸ்ஏ மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்கிறாா். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தெற்குலகின் குரலாக முன்னின்று உலக அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சமத்துவ நிா்வாகம் மற்றும் பன்முகத்தன்மையை உறுதிப்படும் வலுவான அமைப்பாக பிரிக்ஸ் திகழ்கிறது என்றாா்.
இந்தியா-சீனா எல்லை விவகார சீன சிறப்பு பிரதிநிதியாகவும் உள்ள வாங் யி, இந்திய பயணத்தின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: நேபாள வெளியுறவு அமைச்சா்

வங்கதேசம் - துருக்கி இடையே அமைச்சரவை நிலை கூட்டுக்குழு அமைக்க ஒருமித்த முடிவு!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



