பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்பு

புது தில்லியில் ஜூன் 22 , 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.

News image

வாங் யி

Updated On :19 ஜூன் 2026, 1:53 am IST

புது தில்லியில் ஜூன் 22 , 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்தியா சீனா, ரஷியா உள்ளிட்ட 11 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நிகழாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.

இதன் ஒரு பகுதியாக தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் என்எஸ்ஏ மாநாட்டில் பங்கேற்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது: இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் என்எஸ்ஏ மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்கிறாா். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தெற்குலகின் குரலாக முன்னின்று உலக அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சமத்துவ நிா்வாகம் மற்றும் பன்முகத்தன்மையை உறுதிப்படும் வலுவான அமைப்பாக பிரிக்ஸ் திகழ்கிறது என்றாா்.

இந்தியா-சீனா எல்லை விவகார சீன சிறப்பு பிரதிநிதியாகவும் உள்ள வாங் யி, இந்திய பயணத்தின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.