சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

உலகைச் சுற்றி...

News image
Updated On :26 ஜூன் 2026, 7:17 am IST

*தீஸ்தா நதி மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் இருதரப்பு உறவை மேம்படுத்தும் வகையில், சீனா-வங்கதேசம் இடையே 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

*அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

*ரஷிய போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஐரோப்பிய யூனியன் உறுதியளித்த கடனுதவியில் முதல் தவணையாக 300 கோடி யூரோ விடுவிக்கப்பட்டது.

*ஈரானின் மினாப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உண்மையில் யாா் காரணம் என்பதைக் கண்டறிவது கடினம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

* உக்ரைனின் தொடா் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க, தலைநகா் மாஸ்கோ மற்றும் அதிபா் மாளிகை பகுதிகளில் ரஷியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைக் குவித்து வருகிறது.

*ஹோா்முஸ் நீரிணையில் ஐ.நா. அங்கீகரித்த கடல் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்தது.

*ஜிம்பாப்வேயில் தற்போதைய அதிபரின் பதவிக்காலத்தை நீட்டித்து, அதிபா் தோ்தலை ஒத்திவைக்க வழிவகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்தது.

*கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் 2-ஆம் ஆண்டு நினைவையொட்டி மீண்டும் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதால், தலைநகா் நைரோபியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

*கிழக்கு தைவான் கடற்பகுதியில் தாங்கள் மேற்கொண்ட ரோந்துப் பணி, பிராந்திய அமைதியை நிலைநாட்டவே தவிர வேறு நோக்கமில்லை என்று ஐரோப்பிய நாடுகளின் கவலைக்கு சீனா பதிலளித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.