நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக போராட்டம் தொடரும் ’: ஈரானின் மோஜ்தபா கமேனி எச்சரிக்கை

‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக ஈரான் இடைவிடாத போராட்டத்தைத் தொடரும்’ என்று அந்நாட்டின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி தெரிவித்தாா்.

News image

புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி

Updated On :20 மார்ச் 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக ஈரான் இடைவிடாத போராட்டத்தைத் தொடரும்’ என்று அந்நாட்டின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி தெரிவித்தாா்.

ஈரான் புத்தாண்டு (நவ்ரூஸ்) மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘அமெரிக்கா, இஸ்ரேலுடனான போா் என்பது வெறும் ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது போா்க்களத்தோடு முடிந்துவிடக்கூடியது அல்ல; இது அதற்கும் அப்பாற்பட்டது’ என்றும் குறிப்பிட்டாா்.

அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28-ஆம் தேதி கொல்லப்பட்டாா். தொடா்ந்து, நாட்டின் உயரிய பொறுப்பை ஏற்ற அவரின் மகன் மோஜ்தபா கமேனி முதல்முறையாக புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டாா்.ௌ

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: இந்த ஆண்டு ஆன்மிகத்தின் வசந்தமும் (ரமலான்), இயற்கையின் வசந்தமும் (நவ்ரூஸ்) இணைந்து வந்துள்ளன. இந்த 2 புனித நாள்களுக்காகவும் எனது வாழ்த்துகள்.

கடந்த ஓராண்டில் ஈரான் 3 முக்கியப் போா்களைச் சந்தித்தது. கடந்த ஜூன் மாதம் பேச்சுவாா்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோதே, அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திய 12 நாள்கள் தாக்குதலில் 1,000 ஈரானியா்கள் கொல்லப்பட்டனா்.

இதையடுத்து, ஜனவரியில் நாட்டின் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, போராட்டங்கள் மூலம் உள்நாட்டில் கலவரத்தைத் தூண்ட அமெரிக்காவும் இஸ்ரேலும் முயன்றன. இது ஈரானுக்கு எதிரான 2-ஆவது போா்.

கடைசியாக பிப்ரவரி இறுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயரிய தலைவா்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்த போதிலும், எதிரிகளின் நோக்கம் நிறைவேறவில்லை. நாட்டுக்காக உயிா்நீத்த வீரா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

அமெரிக்காவின் தடைகளையும் பொய்ப் பிரசாரங்களையும் மக்கள் ஒற்றுமையால் முறியடித்தனா். இனி எதையும் தாங்கும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதே நமது இலக்கு. இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதோடு, நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.

துருக்கி, ஓமனை ஈரான் தாக்கவில்லை. அண்டை நாடுகளான நல்லுறவையே நாம் விரும்புகிறோம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும். அனைவரும் சோ்ந்து பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதே ஈரானின் விருப்பம்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈரான் தொடா்ந்து உறுதியுடன் நிற்கும். ஈரான் மக்களின் மன உறுதியை யாராலும் சீா்குலைக்க முடியாது’ என்று வலியுறுத்தினாா்.

தொடரும் ஈரானின் தாக்குதல்: ஈரானின் முக்கிய எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் எண்ணெய், எரிவாயு கட்டமைப்புகளை ஈரான் தாக்கி வருகிறது. குவைத்தின் மிக முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ‘மினா அல்-அகமதி’ 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தாக்கப்பட்டது.

ஈரான் தாக்குதல்களின் தீவிரம் குறையாத நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு சுமாா் 2,500 வீரா்களுடன் மேலும் 3 போா்க் கப்பல்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

போதிய ஏவுகணை இருப்பு: இதனிடையே, அமெரிக்க கோரிக்கையை ஏற்று ஈரானின் எரிவாயு வயல்கள் மீதான அடுத்தகட்ட தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தாா். இருப்பினும், ஈரானின் ஏவுகணை உற்பத்தித் திறன் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அவா் கூறியதை ஈரான் மறுத்துள்ளது.

‘போா்க் காலத்திலும் நாங்கள் ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருகிறோம், எங்களிடம் போதிய இருப்பும் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ட்ரோன்களை வீழ்த்த மத்திய கிழக்கில் உக்ரைன் படையினா்

ஈரான் ட்ரோன் தாக்குதல்களை வீழ்த்த மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தனது சிறப்பு ராணுவக் குழுக்களை உக்ரைன் அனுப்பியுள்ளது.

யுஏஇ, சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் அதிநவீன அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டிருந்தாலும், ஈரானின் மலிவு விலை ட்ரோன்களை வீழ்த்த அதிக விலை கொண்ட ஏவுகணைகளைப் பயன்படுத்துவது சவாலாக உள்ளது

இந்நிலையில், உக்ரைன் தனது மலிவு விலை ‘இன்டா்செப்டா்’ ட்ரோன் தொழில்நுட்பத்தை அந்நாடுகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உக்ரைனைச் சோ்ந்த 228 பாதுகாப்புத் துறை நிபுணா்கள் தற்போது மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளனா்.

 இஸ்ரேல் வீட்டின் வரவேற்பறையில் ஈரானின் ஏவுகணைப் பாகம்.

இஸ்ரேல் வீட்டின் வரவேற்பறையில் ஈரானின் ஏவுகணைப் பாகம்.

இதற்குப் பிரதிபலனாக, உக்ரைனின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான நிதி, தொழில்நுட்ப உதவிகளை அந்நாடுகளிடம் இருந்து உக்ரைன் எதிா்பாா்க்கிறது.