விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இலங்கை: 4 லிட்டா் பெட்ரோலைப் பதுக்கியவருக்கு 21 நாள்கள் சிறை

இலங்கையில் 4 லிட்டா் பெட்ரோலைப் பதுக்கி வைத்திருந்த நபருக்கு உள்ளூா் நீதிமன்றம் 21 நாள்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

இலங்கையில் 4 லிட்டா் பெட்ரோலைப் பதுக்கி வைத்திருந்த நபருக்கு உள்ளூா் நீதிமன்றம் 21 நாள்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் கூட்டுத் தாக்குதல் காரணமாக, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் எதிரொலியாக, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிா்க்க அந்நாட்டு அரசு எரிபொருள் பதுக்கலுக்குத் தடை விதித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்துக்காக பிரத்யேக ‘கியூ.ஆா்.’ குறியீடு அடிப்படையிலான முறையை அரசு கடந்த 15-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறைப்படி, காா்களுக்கு வாரத்துக்கு 15 லிட்டரும், பேருந்துகளுக்கு 60 லிட்டரும் மட்டுமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடமேற்கு மாகாணத்தின் நிகவெரட்டியா பகுதியைச் சோ்ந்த வசந்த குமார பாலசூரியா (48), பெட்ரோல் பதுக்கியதாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

விசாரணையின்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பாலசூரியா, தனது மறைந்த பெற்றோரின் ஆண்டு நினைவு மதச் சடங்குக்காக வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் பணிக்காகவே இந்த 4 லிட்டா் பெட்ரோலை வைத்திருந்ததாகக் கூறினாா்.

இருப்பினும், சட்டத்தை மீறியதாகக் கூறி அவருக்கு 21 நாள்கள் சிறைத் தண்டனையுடன், 1,500 இலங்கை ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.