காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

இரவு 1 மணிக்கு அழைத்தாலும்.. இந்திய தொழிலாளர்களை புகழும் புர்ஜ் கலீஃபாவை கட்டியவர்

இரவு 1 மணிக்கு அழைத்தாலும் பதில் சொல்வார்கள் என்று இந்திய தொழிலாளர்களை புகழ்ந்துள்ளார் புர்ஜ் கலீஃபாவை கட்டியவர்

News image

புர்ஜ் கலீபா - file photo

Updated On :7 மே 2026, 5:20 pm IST

இரவு 1 மணிக்கு செல்போனில் அழைத்தாலும் அவர்கள் பதிலளிப்பார்கள் என்று புர்ஜ் கலிஃபவை கட்டிய கட்டுமான நிறுவனர் முகமது அலாபர் இந்திய தொழிலாளர்களை அதிகம் வேலைக்கு அமர்த்துவது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முகமது அலாபர், நல்ல திறமையான இந்திய தொழிலாளர்களையே நான் பெரும்பாலும் பணியமர்த்துவேன், அதற்கு ஒரே இடத்தில் நிலையாக பணியாற்றுவது, கடமை உணர்வு, கூடுதல் முயற்சி எடுக்கும் போக்கு போன்றவைதான்.

பல நேரங்களில் இந்திய தொழிலாளர்கள் நள்ளிரவு 1 மணிக்கு செல்போனில் அழைத்தாலும் அவர்கள் போனை எடுத்துப் பேசுவதை நான் கவனித்திருக்கிறேன். அது அவர்களுடைய பணியின் மீது அவர்கள் வைத்திருக்கும் பொறுப்பையே காட்டுகிறது என்று பாராட்டியிருக்கிறார்.

நான் எப்போதும் என்னுடன் இருப்பவர்களிடம் சொல்லுவேன், என்னடைய அறிவாற்றல் சராசரியானது, ஆனால், என்னுடைய கடினமான உழைப்பு அற்புதமானது. நான் என்னுடைய கடின உழைப்பை நம்புகிறேன் என்று அலாபா கூறியிருக்கிறார்.

நான் இந்த குணத்தை நேரடியாக இந்திய தொழிலாளர்களிடம் பார்க்கிறேன், எந்த அளவுக்கு கடினமாக வேலை செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். திறமை கடினமாக உழைக்கத் தவறும்போது, ​​கடின உழைப்பு திறமையை வெல்லும் என்று ஒரு பழமொழி உண்டு. இதனால்தான் நான் இந்தியர்களைப் பணியமர்த்த விரும்புகிறேன், ஏனென்றால் அவர்கள் அதிகாலை ஒரு மணிக்குக் கூட தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பார்கள் என்று அவர் புகழ்ந்துள்ளார்.

கரோனா, பொருளாதார நெருக்கடி போன்ற காலங்களில் நிறுவனங்களும் நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொண்டு, விழிப்புடன் அபாயங்களைத் தாண்டி தொடர்ச்சியாக தங்கள் செயல்பாடுகளை உத்வேகப்படுத்தவே உழைக்கின்றன. ஆனால், அச்சுறுத்தல்கள் வந்த பிறகு அதனை எதிர்கொள்வதைவிட, முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப தயாராவதே நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

2008 மற்றும் கரோனா போன்ற பேரிடர் காலங்களில் இருந்து நிறுவனங்கள் பாடம் கற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.