பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு!

டொனால்ட் டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு பற்றி...

trump in china

டொனால்ட் டிரம்ப் - ஷி ஜின்பிங் - X

Published On :14 மே 2026, 10:23 am IST

சீனாவுக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.

ரஷியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் தலைவர்கள் கடந்த காலங்களில் சீனாவுக்கு வருகை தந்தபோது அந்நாட்டின் அமைச்சர்களே நேரில் வரவேற்றனர். ஆனால், நேற்று பெய்ஜிங் வந்திறங்கிய டிரம்ப்பை விமான நிலையத்துக்குச் சென்று சீன துணை அதிபா் ஹான் ஜெங்கே வரவேற்றார்.

இந்த நிலையில், பெய்ஜிங்கில் உள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் மாளிகைக்கு இன்று காலை வருகை தந்த டிரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் தலைமையில் இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தக ஒப்பந்தம், ஈரான் போா் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இப்பயணத்தில் டிரம்ப்புடன் அவரின் மகன் எரிக், மருமகள் லாரா, டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Summary

US President Donald Trump Meets China President Xi Jinping in Beijing!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.