தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

செங்கடல் தீவைக் கைப்பற்றிய ஹௌதிகள்! சௌதியின் நிலை என்ன?

செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவை ஹௌதிகள் கைப்பற்றியது குறித்து...

Houthis capture Red Sea island

ஹௌதி படை... - ஏபி | கோப்புப் படம்

Published On :

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை செங்கடலின் நுழைவில் அமைந்துள்ள முக்கிய தீவைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனின் அரசுப்படைகளுக்கும், ஹௌதி கிளர்ச்சிப்படைக்கும் கடந்த சில நாள்களாக மோதல்கள் வெடித்துள்ளன. இதில், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசுப்படைகளிடம் இருந்து முக்கிய துறைமுக நகரமான மோக்காவை ஹௌதிகள் நேற்று (செப். 10) கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, மோக்கா நகரத்தின் மீது சௌதி படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வந்தன. இருப்பினும், இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், உலகின் 12 சதவிகித வர்த்தகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவில் அமைந்துள்ள மாயூன் எனும் தீவை ஹௌதிகள் இன்று (செப். 11) கைப்பற்றியதாக, யேமன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை முழுவதுமாக ஹௌதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், யேமனுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு சௌதி அரேபியா பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் களமிறங்கியுள்ள ஹௌதிகள், அமெரிக்காவின் ஆதரவு நாடான சௌதி அரேபியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கெனவே, பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாக சௌதி அரேபியாவின் கப்பல்கள் செல்ல ஹௌதிகள் தடை விதித்தனர். மேலும், அவ்வழியாகச் செல்ல முயன்ற சௌதி கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that Yemen's Iran-backed Houthi rebels have seized a key island located at the entrance to the Red Sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER