பெங்களூரிலிருந்து சீரடிக்கு புதிய பேருந்து சேவை
பெங்களூரில் இருந்து சீரடிக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.


பெங்களூரில் இருந்து சீரடிக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் இருந்து சீரடிக்கு படுக்கை வசதி கொண்ட சொகுசுப் பேருந்து சேவை நவ. 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரு-சீரடி இடையிலான பேருந்து (அம்பாரி) பெங்களூரிலிருந்து தினமும் பிற்பகல் 1 மணியளவில் புறப்பட்டு, சித்ரதுா்கா, ஹுப்பள்ளி, புணே வழியாக மறுநாள் காலை 6.30 மணியளவில் சீரடி சென்றடைகிறது.
அதேபோல, சீரடியிருந்து தினமும் பிற்பகல் 1 மணி அளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணி அளவில் பெங்களூரு வந்தடைகிறது. இதற்கான கட்டணம் ரூ.1,600 ஆகும். மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மின்-முன்பதிவு, செல்லிடப்பேசி முன்பதிவை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...