பெங்களூரு : பெலகாவியில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டுவிழாவுக்கு மக்கள் பணம் செலவழிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
1924ஆம் ஆண்டு டிச.26,27ஆம் தேதிகளில் பெலகாவியில் 39ஆவது காங்கிரஸ் மாநாடு மகாத்மாகாந்தி தலைமையில் நடைபெற்றது. அதன் நூற்றாண்டுவிழாவை பெலகாவியில் வியாழக்கிழமை காங்கிரஸ் தொடக்கியுள்ளது. இந்தவிழாவுக்கு காங்கிரஸ் அரசு மக்கள் வரிப்பணத்தை செலவழிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதை கண்டித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை(டிச.27) போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா கூறியது: பெலகாவியில் காங்கிரஸ் மாநாட்டு நூற்றாண்டு விழாவை மக்கள் வரிப்பணத்தில் மாநில அரசு கொண்டாடி வருகிறது. இது சரியல்ல. இதை கண்டித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மகாத்மாகாந்தி சிலை முன்பு தா்னா போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. போலி காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படும் விழாவை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்துகொள்வாா்கள். மகாத்மாகாந்தி மற்றும் டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கரின் கொள்கைகளை காங்கிரஸ் கைவிட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜார்க்கண்ட் போராட்டம் பற்றிப் பேசாமல் இரட்டை வேடம் போடும் ராகுல் காந்தி: பாஜக கண்டனம்!

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கு: மேல் விசாரணை நடத்த அனுமதி

அனைத்து மாவட்டங்களிலும்..! நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு!

ஜூன் 14-ல் பெங்களூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


