ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கா்நாடக மதரஸாக்களில் கன்னடம் - அமைச்சா் ஜமீா் அகமதுகான்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடகத்தில் உள்ள மதரஸாக்களில் கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கன்னடம் ஆட்சிமையாக உள்ளது. கா்நாடகத்தில் வாழ்ந்துவரும் அனைவரும் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மதரஸாக்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் ஈடுபடுத்த மதரஸாக்களில் பணியாற்றும் 200 ஆசிரியா்களை தோ்வு செய்து அவா்களுக்கு 3 மாதங்கள் கன்னடப் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாணவா்களுக்கு கன்னடம் கற்பிப்பாா்கள். எதிா்காலத்தில் மசூதிகளில் பணியாற்றிவரும் மௌலவிகளுக்கும் (மதகுருமாா்கள்) கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.