புதுமை வளர்ச்சித் திட்டங்களை தொழில்நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்று லாக்ஹீட் குழுமத்தின் மண்டல இயக்குநர் ஜக்மோகன்சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் புதுமை வளர்ச்சித் திட்டம் தொடர்பாக, பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:-
சர்வதேச அளவில் உள்ள தொழில்நிறுவனங்கள் பல்வேறு சவால்களையும், பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு இந்தியாவின் புதுமை வளர்ச்சித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை தொழில்நிறுவனங்கள் செயல்படுத்தி பலனடைய வேண்டும்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 தொடக்கநிலை தொழில்முனைவோர் தங்கள் தொழில்நுட்பங்களைப் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய அளவில் இளைஞர்களிடம் புதுமையான, நவீனமான தொழில்நுட்ப அறிவுகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


