சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதிலிருந்து பின் வாங்க மாட்டோம்

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் திப்பு சுல்தான் பிறந்த நாளைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்க மாட்டோம் எனத் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வர் தெரிவித்தார்.

Updated On :5 நவம்பர் 2018, 8:12 am IST

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் திப்பு சுல்தான் பிறந்த நாளைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்க மாட்டோம் எனத் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திப்பு சுல்தான் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. அதை ஒரு சிலர் எதிர்த்து வருகின்றனர்.
போராட்டம் என்பது ஜனநாயகத்தின் கடமையாகும். என்றாலும், பிறந்த நாள் விழாவின்போது அமைதியைக் குலைக்கும் வகையில், யாரேனும் முயன்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் லாபத்துக்காக திப்பு பிறந்த நாளை பாஜகவினர் எதிர்த்து வருவதாக, உளவுத் துறையின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
எனவே சட்ட ஒழுங்கை சீர்குலைக்க யார் முயன்றாலும், அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசியலாக்க பாஜக முயன்றால், அதற்கு காங்கிரஸ், மஜத கட்சியினர் உரிய பதிலைக் கொடுப்பார்கள். தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது நமது மரபு என்றாலும், வட கர்நாடகத்தில் 100 வட்டங்களில் வறட்சி நிலவி வருவதால், மாநிலத்தில் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.