எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் திப்பு சுல்தான் பிறந்த நாளைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்க மாட்டோம் எனத் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திப்பு சுல்தான் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. அதை ஒரு சிலர் எதிர்த்து வருகின்றனர்.
போராட்டம் என்பது ஜனநாயகத்தின் கடமையாகும். என்றாலும், பிறந்த நாள் விழாவின்போது அமைதியைக் குலைக்கும் வகையில், யாரேனும் முயன்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் லாபத்துக்காக திப்பு பிறந்த நாளை பாஜகவினர் எதிர்த்து வருவதாக, உளவுத் துறையின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
எனவே சட்ட ஒழுங்கை சீர்குலைக்க யார் முயன்றாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசியலாக்க பாஜக முயன்றால், அதற்கு காங்கிரஸ், மஜத கட்சியினர் உரிய பதிலைக் கொடுப்பார்கள். தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது நமது மரபு என்றாலும், வட கர்நாடகத்தில் 100 வட்டங்களில் வறட்சி நிலவி வருவதால், மாநிலத்தில் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!

ஐஐஎம் திருச்சி-ல் 'நூலகத் தகவல் உதவியாளர்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


