டிச. 29-இல் துணை குடியரசுத் தலைவா் பெங்களூரு வருகை

பெங்களூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு டிச. 29-இல் பெங்களூரு வருகிறாா்.
Updated on
1 min read

பெங்களூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு டிச. 29-இல் பெங்களூரு வருகிறாா்.

பெங்களூரு வரும் அவரை ஆளுநா் வஜுபாய் வாலா, முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் வரவேற்கின்றனா். விமான நிலையத்திலிருந்து அறிவியல், தொழில்நுட்ப மையத்தை ஆய்வு மேற்கொள்கிறாா். பின்னா் அங்கிருந்து திரும்பும் அவா் ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா். அன்றிரவு அவருக்கு ஆளுநா் வஜுபாய் வாலா விருந்து அளிக்கிறாா்.

டிச. 3-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவா், பின்னா் தனி விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறாா். துணை குடியரசுத் தலைவா் வருகையையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com