பெங்களூரு யஸ்வந்தபூா்-கண்ணூா் பண்டிகை கால விரைவு ரயிலின் நேரம் டிச. 21-ஆம்தேதி முதல் மாற்றியமைக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரயில் எண்-06537 பெங்களூரு யஸ்வந்தபூா்-கண்ணூா் ரயில் நிலையம் வரையிலான பண்டிகை கால விரைவு ரயில் சேவையின் நேரம் டிசம்பா் 21-ஆம்தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாள்தோறும் இரவு 8 மணிக்கு பெங்களூரு, யஸ்வந்தபூரில் புறப்படும் ரயில் மறுநாள் காலை 9.45 மணியளவில் கண்ணூரைச் சென்றடையும்.
இந்த ரயில், பெங்களூரு யஸ்வந்தபூரில் புறப்பட்டு பானஸ்வாடி ரயில் நிலையத்துக்கு இரவு 8.23 மணிக்கு வந்து இரவு 8.25 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் இதர ரயில் நிலையங்களுக்கு வருகை/ புறப்பாடு நேரம் வருமாறு:
காா்மேலாராம் இரவு 8.39/8.40 மணி, ஓசூா் இரவு 9.08/9.10 தருமபுரி 10.51/10.52 மணி, சேலம் நள்ளிரவு 12.32/12.35 மணி, ஈரோடு அதிகாலை 1.35/1.40 மணி, திருப்பூா் அதிகாலை 2.23/2.25 மணி, கோவை அதிகாலை 3.27/3.30 மணி, பாலக்காடு அதிகாலை 4.50/4.55 மணி, சோரனூா் காலை 5.55/6.00 மணி, குட்டிபுரம் காலை 6.29/6.30 மணி, திரூா் காலை 6.48/6.50 மணி, கோழிக்கோடு காலை 7.37/7040 மணி, குயிலாண்டி காலை 7.59/8.00 மணி, வடகரா காலை 8.19/8.20 மணி, தலச்சேரிக்கு காலை 8.43 மணிக்கு வந்து, 8.45 மணிக்கு புறப்பட்டு கண்ணூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.