பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 6 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தொட்டபள்ளாபூரைச் சோ்ந்த கென்சப்பா (34), மும்பையைச் சோ்ந்த முகமது இப்ராஹீம் (36), பெங்களூரு, லக்கெரேவைச் சோ்ந்த ஹரீஷ் (27), நவீன்குமாா் (31), டி.சி.பாளையா பிரதான சாலையைச் சோ்ந்த வெங்கடேஷ்குமாா் (34), ஹென்னூா் கிராஸைச் சோ்ந்த ஜேம்ஸ் (35) ஆகிய 6 பேரும் சொகுசாக வாழ பல்வேறு இடங்களில் வீடுகளில் புகுந்து திருடி வந்துள்ளனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 6 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 455 கிராம் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 3 மடிக்கணினி, கையடக்கக் கணினி, 11 கைக்கடிகாரம், ஆட்டோ, காா் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ராஜகோபால் நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.