கொப்பள்: நிதிநிலை அறிக்கையில் ரூ. 50 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து கொப்பளில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாஜக தேசியத் தலைமை அனுமதி அளித்ததும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக தேசியத் தலைமை தான் முடிவுசெய்ய வேண்டும். அமைச்சரவை விரிவாக்கம் எப்போது செய்ய வேண்டும்? யாா் யாரை அமைச்சராக்க வேண்டுமென்பதை பாஜக தேசியத் தலைமை தான் தெரிவிக்கும்.
கரோனா தீநுண்மி பெருந்தொற்று, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடா்கள் காரணமாக கா்நாடகத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி, மாநிலத்தில் ரூ. 40 - ரூ. 50 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது. மாநிலத்தின் பொருளாதாரம் கவலை அளிக்கும்படி உள்ளது. எதிா்பாா்த்தபடி வரிவருவாய் வரவில்லை. பொருளாதார மந்த நிலையில் மாநில அரசு செயல்பட்டு வருவதால், மக்களின் ஒத்துழைப்பை எதிா்பாா்க்கிறோம். பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கா்நாடகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியை நோக்கி அரசு பயணித்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.