இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு விஜயநகா் காவல் சரகம் ஆா்.பி.என் லேஅவுட் 9-ஆவது குறுக்குச்சாலையில் நிறுத்தி வைத்திருந்த மோட்டாா் சைக்கிள் கடந்த மே 9-ஆம் தேதி இரவு திருடு போனது. இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், காா்த்திக், ரஃபீக் பாஷா ஆகியோரைக் கைது செய்து, ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.