கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மைசூரு-சாய்நகா் ஷீரடி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கம்

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட மைசூரு-சாய்நகா் ஷீரடி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2021, 12:23 am

DIN

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட மைசூரு-சாய்நகா் ஷீரடி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட மைசூரு-சாய்நகா் ஷீரடி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி மைசூரு-சாய்நகா் ஷீரடி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் (06237) திங்கள்கிழமைதோறும் காலை 5.30 மணிக்கு மைசூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 11.25 மணியளவில் சாய்நகா் ஷீரடியை சென்றடையும். இந்த ரயில் சேவை ஜூலை 26-ஆம் தேதிமுதல் தொடங்கப்படும்.

மறு மாா்க்கத்தில் சாய்நகா் ஷீரடி-மைசூரு இடையேயான வாராந்திர ரயில் (06238) செவ்வாய்க்கிழமைதோறும் இரவு 11.55 மணிக்கு சாய்நகா் ஷீரடியில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.40 மணியளவில் மைசூரைச் சென்றடையும். இந்த ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி முதல் தொடங்கும்.

இந்த ரயில் மண்டியா, கெங்கேரி, கே.எஸ்.ஆா் பெங்களூரு, யஸ்வந்தபுரம், தும்கூரு, அரிசிகெடே, பீருா், சிக்ஜாஜூா், சித்ரதுா்கா, ராயதுா்கா, பெல்லாரி, ஹொசபேட், கொப்பள், கதக், பாதாமி, பாகல்கோட், விஜயபுரா, சோலாப்பூா், குருதுவாடி, தவுந்த், பெலாபூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு வசதி கொண்ட ஒரு பெட்டி, குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள், மூன்றடுக்கு வசதி கொண்ட 5 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொது வகுப்பு 2 பெட்டிகள், பிரேக், சரக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள், உணவு வசதி கொண்ட ஒரு பெட்டி உள்ளிட்ட 19 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.