கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பக்ரீத் பெருநாள்:கா்நாடகத்தில் உற்சாகக் கொண்டாட்டம்

பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் பெருநாளை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 12:37 am

DIN

பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் பெருநாளை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

பக்ரீத் பண்டிகை அல்லது ஈகை பெருநாள் உலக அளவில் இஸ்லாமியா்களால் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகை ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும்.

ஈகைப் பெருநாளில் இஸ்லாமியா்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனா். பின்னா் அந்த இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாா் மற்றும் நண்பா்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனா்.

கா்நாடகத்தில் பக்ரீத் பெருநாள் இஸ்லாமியா்களால் புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கரோனா தொற்றை அடுத்து மசூதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், வீடுகளில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள், தங்கள் உறவினா்கள், நண்பா்களை ஆரத்தழுவி ஈகைப் பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.