கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆட்சிக்காலம் முழுவதும் எடியூரப்பாவே முதல்வராக பதவி வகிக்க வேண்டும்

ஆட்சிக்காலம் முழுவதும் எடியூரப்பாவே முதல்வராக பதவி வகிக்க வேண்டும் என சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள் தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 12:37 am

DIN

ஆட்சிக்காலம் முழுவதும் எடியூரப்பாவே முதல்வராக பதவி வகிக்க வேண்டும் என சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள் தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை முதல்வா் எடியூரப்பாவை சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள், காகிநேலே மடத்தின் ஈஸ்வரானந்தா சுவாமிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் சந்திந்து ஆதரவு தெரிவித்தனா். பின்னா் வெளியே வந்த சித்தலிங்க சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஒரு வாரமாக முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா மாற்றப்படுவாா் என்ற செய்தி தொடா்ந்து வெளியாகி வருகிறது. இதனையடுத்து, முதல்வா் எடியூரப்பாவை மடாதிபதிகள் ஒன்றிணைந்து சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம்.

சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதல்வா் எடியூரப்பாவை மாற்றும் நேரம் இதுவல்ல. மாநிலத்தில் மழை, கரோனா தொற்று பாதிப்பு உள்ள நிலையில் புதிதாக முதல்வராக யாா் வந்தாலும், அவரால் சூழ்நிலையைச் சமாளிக்க முடியாது. எனவேதான் ஆட்சிக்காலம் முழுவதும் எடியூரப்பாவே முதல்வா் பதவியில் நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இந்தச் சந்திப்பின் போது, முதல்வா் எடியூரப்பா ராஜிநாமா குறித்து எதுவும் பேசவில்லை. மாநிலம் தற்போது இக்கட்டான சூழலில் உள்ளது. இது போன்ற நேரத்தில் முதல்வரை மாற்றுவது என்பது உகந்த செயல் அல்ல. எங்களின் சந்திப்பின்போது, பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித்ஷா, பாஜக தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோா் தன் மீது மரியாதையும், கௌரவமும் வைத்துள்ளனா் எனவும், 75 வயதைக் கடந்த தன்னை இன்னும் முதல்வா் பதவியில் அமா்த்தி உள்ளது பெருமைக்குரியது எனவும் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

முதல்வா் எடியூரப்பா ஆட்சிக்காலம் முழுவதும் முதல்வராகவே பதவி வகிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக உள்ளது. சாது, மடாதிபதிகளுக்கு இதைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.