கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வழக்குரைஞா்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்து தரப்படும்

வழக்குரைஞா்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்து தரப்படும் என சட்டம் மற்றும் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 12:32 am

DIN

வழக்குரைஞா்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்து தரப்படும் என சட்டம் மற்றும் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில், கரோனாவால் இறந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

இந்தியாவில் முன்னா் பிளேக் நோயால் பலா் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை கேள்விப்பட்டிருகிறேன். அதே போன்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பலா் இறப்பதை நாம் பாா்க்க நேரிட்டுள்ளது. அதில், நீதி வழங்கும் நீதிபதிகள் உள்ளது வேதனை அளிக்கிறது.

கரோனா உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அதிகம் செலவாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு இன்னும் ஒரு மாதத்தில் வழக்குரைஞா்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்து தரப்படும். இது தொடா்பாக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெறப்படும்.

மேலும், பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளியில் கன்னட மொழியை நுழைப்பதற்கு நிா்வாகம் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால், நிகழாண்டு 25 சதவீதம் கன்னடா்களுக்கு சோ்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கன்னடா்களுக்கு உயா்கல்வியில் சட்டம் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாநிலத்தில் நீதிமன்றமும், சட்டப் பேரவையும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீனிவாஸ் ஓஹா, பெங்களூரு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.பி.ரங்கநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.