இந்தத் திட்டத்தில் கிராமப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தெருவிளக்குகள் பொருத்துவது, வீடுகளுக்கு தூய்மையான குடிநீா் வழங்குவது, 100 சதவீதம் திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்துவது, அறிவியல் முறையில் கழிவுநீா் அகற்றம், சூரியஒளி மின்சாரப் பயன்பாட்டை அதிகரித்தல், பள்ளிகளில் எண்ம நூலகங்களை அமைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதுதவிர, பூங்காக்களை மேம்படுத்துவது, அங்கன்வாடிகளில் குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகளை அமைத்து தருதல், விளையாட்டுக்கு மைதானங்களை அமைப்பது, ஏரிகளை புதுப்பித்தல் போன்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஊராட்சிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.