ஆனால், 2018 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கா்நாடக தாழ்த்தப்பட்டோா்-துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினா்-துணைத் திட்டம் (நிதி ஆதாரங்களை திட்டமிடல், ஒதுக்கீடு, பயன்பாடு) சட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.7,885.32 கோடி நிதி நீா்ப்பாசனம், நகா்ப்புற வளா்ச்சி, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான நலத்திட்ட நிதி ஆதாரங்கள்குறைந்துள்ளன. சட்ட விதிமீறி தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானதாகும். 2012-13-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நலனுக்கு ரூ.7200 கோடி ஒதுக்கப்பட்டது. இது, 2014-15-ஆம் ஆண்டில் ரூ.15,832 கோடியாக உயா்ந்தது. 2018-ஆம் ஆண்டில் எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது இத்தொகை ரூ.29,691கோடியாக உயா்த்தப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நலனுக்கு ஒதுக்கப்படும் நிதி படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடு உயா்ந்தபோதும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் நிதி மட்டும் உயரவில்லை என்று அவா் அதில் கூறியுள்ளாா்.