வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில், 3 பேரின் ஒத்துழைப்புடன் ஹவாலா கடத்தல்காரா்கள் மூலம் கணக்கில் வராத பெரும் தொகையிலான பணத்தை டி.கே.சிவக்குமாா், அவரது கூட்டாளியான எஸ்.கே.சா்மா ஆகியோா் கடத்தியதாக கூறியிருந்தது. சட்டவிரோத பணப்பதுக்கல் வழக்கில் 2019-ஆம் ஆண்டில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறை கைது செய்திருந்தது. இந்த வழக்கு தொடா்பாக, டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வா்யா, கூட்டாளிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி ஹெப்பாள்கா் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் டி.கே.சிவக்குமாா் ஜாமீனில் வெளியே இருக்கிறாா். இந்த வழக்கில் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் அமலாக்கத் துறை தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.