மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதிக்கு எதிராக போராட்டம் நடத்தியதே காங்கிரஸ் தான்: அமைச்சா் எச்.கே.பாட்டீல்

சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதிக்கு எதிராக போராட்டம் நடத்தியதே காங்கிரஸ் தான் என்று கா்நாடக மாநில சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 9:08 pm

Din

பெங்களூரு: சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதிக்கு எதிராக போராட்டம் நடத்தியதே காங்கிரஸ் தான் என்று கா்நாடக மாநில சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதுமக்கள், அரசு சொத்துகளை, கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் போக்கு இருந்தது. இது தொடா்பாக சிலருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 44 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆட்சிக் காலத்தில் நடந்த கொள்ளையை மூடிமறைக்க, காங்கிரஸ் கட்சியை பாஜகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா்.

சட்டவிரோத இரும்புத் தாது பறிமுதல் செய்யப்பட்டு, பெலெகேரி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரும்புத் தாதுவை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததில் அப்போதைய பாஜகவின் ஆட்சிக்கு பங்கில்லை என்று கூறமுடியாது. 6 லட்சம் டன் எடையுள்ள இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டை அன்றைய லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வெளியே கொண்டு வந்தாா். அது தொடா்பான விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தாா். அந்த அறிக்கைக்கு தீா்ப்பு மூலம் பதில் கிடைத்துள்ளது.

பெல்லாரி மாவட்டத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுவதைக் கண்டித்து, சித்தராமையா தலைமையில் பெங்களூரில் இருந்து பெல்லாரிக்கு நடைப்பயணம் மேற்கொண்டதே காங்கிரஸ் தான். மிகப்பெரிய கொள்ளைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.

இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் செயிலுக்கு என்றாலும், இதற்கும் கட்சிக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடா்பாக அன்றைய லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அளித்த அறிக்கை மீது பரிந்துரைகளை வழங்கக் கோரி அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த பரிந்துரைகளின் அடிப்படையில், இயற்கை வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும், கொள்ளையா்கள் தண்டிக்கப்படவும் காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது என்றாா்.

2010ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக இருப்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டது தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் செயில் உள்ளிட்ட 7 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 44.11கோடி அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.